கடைதிறப்பு நிகழ்ச்சியில் ஓவியா உற்சாகம்.. 'கொக்குநெட்ட கொக்கு' பாடலைப் பாடி அசத்தல்!
சென்னையில் தனியார் கடைதிறப்பு விழாவில் பங்கேற்க வந்த நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை: பிரபல தனியார் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்காக பழைய மகாபலிபுரம் சாலைக்கு வந்த பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களுக்கு ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடிய கொக்குநட்டு கொக்குநட்டு பாடலைப் பாடி மகிழ்வித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி சாலை, காரப்பாக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ஷாப்பிங் மால் இன்று திறப்பு விழா காண்கிறது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா பங்கேற்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டதால் ஓவியா ஆர்மிக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை திறப்பு விழாவிற்கு வந்த ஓவியாவிற்கு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சார்பில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என்றே தெரிகிறது.
|
புடவையில் வந்த ஓவியா
புடவை அணிந்து புதுவித ஹேர்ஸ்டைலுடன் சிரித்தபடியே வந்தார் ஓவியா. நிறுவனம் சார்பில் போடப்பட்டிருந்த மேடையில் ஏறி ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து நன்றி தெரிவித்தார்.
|
100வது நாள் நிகழ்ச்சியில்
நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் நிகழ்ச்சியல் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
|
கொக்குநட்டு பாடல்
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பாடி பிரபலமான கொக்கு நட்டு கொக்கு நட்டு பாடலையும் ரசிகர்களுக்காகப் பாடிக் காண்பித்தார். ஓவியாவின் பாடலைக் கேட்டு ரசிகர்களின் விசில் சத்தம் பறந்தது.
|
கூட்டமில்லையா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய நிலையில் அவர் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் ரசிகர்கள் கூடிவில்லை என்று தெரிகிறது. திங்கள்கிழமை காலை என்பது இதற்கு ஒரு காரணம்.