For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் என்னை அடித்து வெளியேற்றியது.. நடிகை வனிதா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

போலீசார் தன்னை வீட்டில் இருந்து அடித்து வெளியேற்றியதாக நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் விஜயகுமாரை விளாசிய மகள் வனிதா-வீடியோ

    சென்னை: போலீசார் தன்னை வீட்டில் இருந்து அடித்து வெளியேற்றியதாக நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு அடிதடி வரை கூட சென்றுள்ளது.

    இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மனைவி மறைந்த மஞ்சுளாவின் பெயரில் சென்னை ஆலப்பாக்கத்தில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை நடிகர் விஜயகுமார் சினிமா படப்பிடிப்புக்கு விட்டு வருகிறார்.

    காலி செய்ய மறுப்பு

    காலி செய்ய மறுப்பு

    இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

    வழக்குப்பதிவு

    வழக்குப்பதிவு

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    விஜயகுமார் அச்சுறுத்துகிறார்

    விஜயகுமார் அச்சுறுத்துகிறார்

    இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை வனிதா இன்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, என்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு தந்தை விஜயகுமார் தம்மை அச்சுறுத்துகிறார்.

    அம்மாவுடன் இருப்பது போல்

    அம்மாவுடன் இருப்பது போல்

    சொந்த வீட்டுக்கு நான் எப்படி வாடகை தர முடியும்? சென்னை மதுரவாயிலில் உள்ள வீட்டு முகவரிதான் என் பாஸ்போர்ட்டில் உள்ளது. 'அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன்.

    வாடகை கொடுக்கிறேன்

    வாடகை கொடுக்கிறேன்

    வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார். வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

    போலீசார் அடித்தனர்

    போலீசார் அடித்தனர்

    காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர். சிவில் வழக்கு நிலுவையில் உள்ள போது போலீசார் வழக்குப்பதிவு செய்தது தவறு. இவ்வாறு நடிகை வனிதா தெரிவித்தார்.

    English summary
    Actress Vanitha complaints to commissioner office that police forcefully sent me out from house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X