நைட்டியோடு நடு ரோட்டில் சண்டை போட்ட வனிதா.. போலீசை வைத்து விரட்டியடித்த விஜயகுமார்
Recommended Video
சென்னை: நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில், அவரது வாடகை வீட்டில் வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வனிதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியது.
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது.
நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது.
வீடு பிரச்சினை
விஜயகுமாருடன் மட்டுமின்றி, வனிதாவிற்கும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது. சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.
இரவு அதிரடி
மஞ்சுளா பெயரில் இருக்கும் இந்த வீட்டை தன்னுடையது என கூறி வனிதா பிரச்சனை செய்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மீடியாக்கள் உதவி
வனிதா தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் பேச மறுத்த அவர், படம் பிடிக்க விடாமல் கேமராவை பறிக்க முயன்றார். நைட்டியுடன் நடு ரோட்டில் சண்டை போட்டார். ஆனால், இரவு போலீசார் அவரை வெளியேற்றிய பிறகு ஊடகத்தினர் தயவை நாடிய வனிதா, தான்தான் தனது அம்மா சொத்தின் வாரிசு என்று கூறினார் வனிதா.
எங்கே செல்வது
போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னை அடித்துவிட்டதாகவும், இப்போது போக்கிடம் இல்லாமல் தெருவில் நிற்பதாகவும் உருக்கமாக பேட்டியளித்தார் வனிதா. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.