For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புற்றுநோயால் கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணம்- முதல்வர் இரங்கல், அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

புற்றுநோயால் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் மரணமடைந்தார். அவருக்கு அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமார் ஐபிஎஸ் மரணமடைந்தார். அவர் சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பலனின்றி மரணமடைந்தார்.

Additional DGP Sanjeev kumar died at kilpauk hospital

இவரது பூத உடலுக்கு காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இன்று அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இவரது உடல் இன்று பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. சஞ்சீவ் குமார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

English summary
Additional DGP Sanjeev kumar dead at kilpauk Government hospital. He was suffered by cancer. His funeral will take place at Besant nagar. Minister Jayakumar paid homage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X