பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு.. டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியின் போது வைக்கப்பட்டு இருந்த அதிமுக பேனர்களை கிழித்ததாக டிடிவி தினகரன் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video
ராமநாதபுரம்: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியின் போது வைக்கப்பட்டு இருந்த அதிமுக பேனர்களை கிழித்ததாக டிடிவி தினகரன் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இதற்காக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அங்குள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் அங்கு வந்து மாலை அணிவித்துவிட்டு சென்றபின் அங்கிருந்த அதிமுக பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு இருக்கிறது. சில மர்ம நபர்கள் அங்கிருந்த அதிமுக பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை கிழித்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் டிடிவி தினகரன்தான் என்று அதிமுகவினர் ஏற்கனேவே குற்றச்சாட்டு வைத்து வந்தனர். அவரின் தூண்டுதலின் பேரில் அமமுகவினர் இப்படி செய்துள்ளனர் என்று கூறினார்கள்.
இந்த நிலையில் பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிப்பு தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் உள்பட 100பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவினரின் புகாரை அடுத்து கமுதி போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து உள்பட 6 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.