....த்தூ விஜயகாந்த் கொடும்பாவி எரிக்கப் போய் வேட்டியில் தீ பிடித்தது- அதிமுகவினர் அலறி ஓட்டம்
விழுப்புரம்: துப்பி கெட்ட ...த்தூ......விஜயகாந்த் கொடும்பாவியை விழுப்புரத்தில் எரிக்கும் போது அதிமுகவினர் வேட்டியிலும் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயகாந்த் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது வேஷ்டியில் தீப்பற்றி அதிமுகவினர் ஓட்டம்:
Posted by Mohan Babu on Tuesday, December 29, 2015
தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க உத்தரவிட்டார். அவரது அடிப்பொடிகளும் முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்து எறிந்தனர்.
இதனால் கொந்தளித்துப் போன அதிமுகவினர் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்தனர். விழுப்புரத்திலும் அதிமுகவினர் விஜயகாந்த் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடும்பாவி எரித்துக் கொண்டிருக்கும் போது அதில் இருந்து தெறித்த தீ அதிமுகவினர் சிலரது வேட்டியிலும் பிடித்துக் கொண்டது. இதில் அலறிப் போன அதிமுக நிர்வாகிகள் வேட்டியை நடுரோட்டில் கழற்றிவிட்டு உயிர் தப்பினால் போதும் என அரை நிர்வாணமாக ஓடினர். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.