For Daily Alerts
Just In
சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக எதிர்ப்பு: மதுரை அருகே காதில் பூ சுற்றி, ஒப்பாரியுடன் போராட்டம்
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக வருவதற்கு அதிமுகவினர் அருகே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை: அதிமுக தலைமையை சசிகலா ஏற்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் காதில் பூ சுற்றி, ஒப்பாரி வைத்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவியை கைப்பற்றுவதில் சசிகலா தரப்பு தீவிர முயற்சி செய்து வருகிறது. அதிமுக தலைமையை சசிகலா தான் ஏற்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்து வருகின்றனர்.
இதற்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் தலைமை பதவியை கைப்பற்றுவதில் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டியில் காதில் பூ சுற்றி, ஒப்பாரி வைத்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
ADMK Cadres opposed Sasikala lead to the paty in near madurai