For Daily Alerts
Just In
'சின்னம்மா' போஸ்டர் யுத்தம்! செஞ்சியில் அதிமுகவினரால் தீபா பேனர்கள் அகற்றம்!!
சென்னை: அதிமுகவில் 'சின்னம்மா' யார் என்பது தொடர்பான போஸ்டர் யுத்தம் மும்முரமாக நடைபெறுகிறது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக செஞ்சியில் வைக்கப்பட்ட பேனரை அதிமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் 'சின்னம்மா' சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து திணிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் தீபாவையே 'சின்னம்மா' என அழைத்து போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.
அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கும் போய்ஸ்டர்களை அதிமுகவினரே கிழித்து வருகின்றனர். சசிகலாவின் போஸ்டர்களில் கருப்பு மை உள்ளிட்டவற்றையும் பூசி விடுகின்றனர்.
இந்த நிலையில் செஞ்சியில் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்ட பேனரை அதிமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
ADMK cadres removed the Deepa's supporters banners in Gingee.
Story first published: Wednesday, December 14, 2016, 12:42 [IST]