ஆமா, ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் யாரு?.. நாளை வரை பொறுத்திருங்களேன் ப்ளீஸ்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிக்கப்படும் என என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து நாளை அறிவிக்கப்படும் என என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால் இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுள்ள அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதில் யாரை நிறுத்துவது என ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்குள் ஏற்பட்டுள்ள போட்டியே காரணம் என கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவைத் தலைவர் மதுசூதனனும், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி பால கங்காவும் விருப்பமனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என தெரிவித்தார். நாளை நடைபெறும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஆர்கே நகர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.