டிசம்பர் 21ம் தேதி அதிமுக கிறிஸ்துமஸ்... ஜெ.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நாளை (21-ந் தேதி) மாலை 4 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.
விழாவில் திருநெல்வேலி மறை மாவட்ட பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ் துவக்க ஜெபம் செய்கிறார். அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் வேதாகமம் வாசிக்கிறார்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்கை பகிர்ந்து கொடுத்து வாழ்த்துரை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் சென்னை - மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் ஆண்டனி சாமி, தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் வே.தேவசகாயம் ஆகியோர் கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகிறார்கள்.
விழாவில் அனைத்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஷ் பாண்டியன் எம்.பி., சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், கிறிஸ்தவ போதகர்கள், குருமார்கள், ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ் சுவிசேஷ லூத்ரன் திருச்சபையின் போதகர் எஸ்.எட்வின் ஜெயக்குமார் நிறைவு ஜெபம் செய்கிறார். விழாவில் பிளசி சிஸ்டர்ஸ் பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களை பாடுகின்றனர். ஆர்.வி.ரபிபெர்னார்ட் எம்.பி. நன்றி கூறுகிறார்.