தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கிறது.. அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேச்சு
சென்னையில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை: சென்னையில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா தற்போது நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உள்ளனர்.
சென்னையில் இருக்கும் நந்தம்பாக்க வர்த்தக வளாகத்தில் தற்போது அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா தற்போது நடைபெறுகிறது. வருடாவருடம் நடக்கும் இந்த விழா இந்த வருடமும் சரியாக டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளனர். இருவருக்கும் அருகருகே இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விழாவிற்கு அதிமுக அமைச்சர்களும், தொண்டர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். நாளை ஆர்.கே நகர் தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் இன்று நடக்கும் இந்த விழா முக்கியத்துவத்தை பெற்று இருக்கிறது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ''நாட்டில் மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை'' என்றார். மேலும் ''கிறிஸ்துமஸ் தினத்தில் மக்களின் கோரிக்கைகள் பல பரிசீலிக்கப்படும்'' என்றும் குறிப்பிட்டார்.