திமுகவைத் தொடர்ந்து அதிமுகவும் செயற்குழுவைக் கூட்டுகிறது
சென்னை: திமுக செயற்குழு ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிமுகவும் தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக 14ம் தேதி கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டப்பட்டுள்ளது. இதில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதிமுகவும் தனது செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 20ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது என்று தெரியவில்லை. அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.