'இன்னுமா சட்டைய கிழிக்கல?' திமுகவினரை உசுப்பிய பேராவூரணி எம்எல்ஏ!
திமுக எம்எல்ஏக்களை பார்த்து இன்னுமா சட்டையை கிழிக்காமல் உள்ளீர்கள் என பேராவூரணி எம்எல்ஏ கேட்டதால் சட்டசபையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் கிண்டலடித்து வருகின்றனர். இன்னுமா சட்டையை கிழிக்காம உள்ளீர்கள் என்று அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசு திமுக எம்எல்ஏக்களை பார்த்து கேட்டது சிரிப்பலையை உருவாக்கியது.
சட்டசபையில் என்னதான் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அடித்துக்கொண்டாலும் அவ்வப்போது சட்டசபையில் சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்த அதிமுக அரசு இனியும் நீடிக்கக்கூடாது என திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் இன்றைய கூட்டத்தில் புயலை வீசும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் செல்லூர் ராஜூ
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது முதலே ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கிண்டலடித்து வருகின்றனர். செல்லூர் ராஜூவை தெர்மாகோல் தெர்மாகோல் என திமுகவினர் கலாய்த்தனர்.
இன்னுமா சட்டையை கிழிக்கல?
இந்நிலையில் இதற்கு பதிலடியாக திமுகவினரை அதிமுக எம்எல்ஏக்கள் கலாய்த்துள்ளனர். அதாவது போராவூரணி எம்எல்ஏவான கோவிந்தராசு திமுக எம்எல்ஏக்களை பார்த்து இன்னுமா சட்டையை கிழிக்காம உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.
சட்டசபையில் சிரிப்பலை
இதனால் சட்டசபையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. கடந்த கூட்டத்தொடரின் போது ஏற்பட்ட அமளியில் திமுகவினர் சட்டைக் கிழிக்கப்பட்டது.
தானே சட்டையைக் கிழித்துக்கொண்ட..
எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் தானே தனது சட்டையைக் கிழித்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதனை மனதில் வைத்து பேராவூரணி எம்எல்ஏ இவ்வாறு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.