For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்ல.. தம்பிதுரை அசால்ட்!!!

சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கரூர்: சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

பாஜக மீது விளாசல்

பாஜக மீது விளாசல்

இந்நிலையில் அதிமுக எம்பி தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக அரசை சரமாரியாக விளாசினார்.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

அவர் பேசியதாவது, காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அச்சுறுத்தலுக்கு பயப்படாது

அச்சுறுத்தலுக்கு பயப்படாது

மத்திய அரசை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது. சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது.

திமுகவுடன் கூட்டணி

திமுகவுடன் கூட்டணி

ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன.

தலைவர்களிடையே உடன்பாடு

தலைவர்களிடையே உடன்பாடு

ரெய்டுகளுக்கு காரணம் திமுகதான். திமுக - பாஜக தலைவர்களிடையே ஏற்பட்ட உடன்பாடே காரணம். இவ்வாறு தம்பிதுரை குற்றம்சாட்டினார்.

English summary
ADMK MP Thambidurai says ADMK govt will not scare of CBI and IT raids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X