ஜெயலலிதாவை விஜயகாந்த் திட்டியதை தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசி, திட்டியதை தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ராஜவூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். அதிமுக தொண்டர். கட்சி மீதும், முதல்வர் ஜெயலலிதா மீதும் அதிக மரியாதையும், பற்றும் கொண்டவர்.
நேற்று முன்தினம் தஞ்சையில் நடந்த தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியதுடன், அவரை தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படுகிறது.
விஜயகாந்த் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியது பற்றி அறிந்த தங்கவேல் மனமுடைந்தார். அம்மாவை இப்படி பேசிவிட்டாரே என்ற மனவேதனையில் இருந்த அவர் நேற்று தீக்குளித்தார்.
அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.