முதல்வர் குணமடைய பிராத்தனைக்கு சென்ற அதிமுக பிரமுகர் விபத்தில் பலி
சமயபுரம்: தமிழக முதல்வர் உடல் நலமடைய வேண்டி பிராத்தனைக்கு சென்ற அதிமுக பிரமுகர் விபத்தில் பலியானார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடநத் 15 நாட்களுக்கும் மேலாக உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல் நலமடைய வேண்டும் என்று பல்வேறு வகையான பிராத்தனைகள் அதிமுக தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்வதற்காக சமயபுரத்திலிருந்து பாடலூரில் உள்ள வழி துணை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிமுக பிரமுகர் சிவாஜி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடைய பேரன் மாரியப்பனும் வண்டியின் பின்பக்கத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிவாஜியின் இரு சக்கர வாகனம், சமயபுரம் உப்பாறு பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இன்னொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற பேரன் மாரியப்பன் படுகாயம் அடைந்துள்ளார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.