டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு - காரணம் என்ன?
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு இன்று டிடிவி தினகரனை திடீரென சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்ற பிரபு அவருடன் பேசினார். முதல்வர் ஈபிஎஸ் ஆதரவாளரான பிரபு திடீரென தினகரனை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுவின் தந்தை பெயர் அய்யப்பா, தாயார் பெயர் அ.தைலம்மாள், தியாகதுருகம் அடுத்த கலையநல்லூரைச் சேர்ந்த இவர் 1984ல் பிறந்தார். பிடெக் படித்துள்ளார்.
பிரபு விவசாயம், ஒப்பந்தக்கார், லாரி உரிமையாளர் ஆவார். கடந்த 1999ல் அதிமுக கட்சியில் இணைந்து தற்போது தியாகதுருகம் ஒன்றிய இளைஞர்(ம) இளம் பெண்கள் பாசறை செயலாளர், இயக்குநர் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகம், பெரியமாம்பட்டு கூட்டுறவு கடன் சங்க இயக்குநராக உள்ளார். முதல் முறையாக 2016 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த பிரபு இப்போது டிடிவி தினகரனை திடீரென சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். தினகரனை சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.