புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பரபரப்பு.. மின் மீட்டரை உடைத்த அதிமுக எம்எல்ஏக்கள்
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
புதுச்சேரி: மக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவைவிட மின் கட்டணம் அதிகமாக வருவதால் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன் வையாபுரி மற்றும் அதிமுகவினர் இன்று புதன்கிழமை புதுச்சேரி சட்டமன்ற வளாகத்துக்கு வந்து புதுச்சேரியில் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்ட புதிய மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது அதிமுக எம்எல்ஏ ஊடகங்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. புதிய டிஜிட்டல் மின் மீட்டரைப் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டு புதிய மின் மீட்டர்கள் சீனாவிலிருந்து வாங்கி பொருத்தப்பட்டன. இதனால், ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் கட்டியவர்கள் தற்போது 3 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டி வருகின்றனர். அதனால், இந்த மின் மீட்டர் கருவிகளை மாற்றிவிட்டு புதிய மின் மீட்டர் கருவிகளை பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
புதுச்சேரியில் பொருத்தப்பட்ட புதிய மின் மீட்டர் கருவி மின் உபயோகத்தைவிட அதிகமாக மின் கட்டணம் வருவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு உள்ளது.