For Daily Alerts
Just In
9 நாட்களுக்கு பிறகு ரிசார்ட்டை காலி செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள்
9 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்எல்ஏக்கள் சொகுசு பேருந்துகளில் புறப்பட்டனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை புறப்பட்டனர். அமைச்சர்களின் கார்களிலும், 3 சொகுசுப் பேருந்துகளிலும் எம்எல்ஏக்கள் கூவத்தூரிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து எம்எல்ஏக்கள் கூவத்தூரை காலி செய்துள்ளனர். 3 சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
சசிகலா தரப்பால் கடந்த 8 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இதையடுத்து அவர்கள் தற்போது கூவத்தூரை காலி செய்துவிட்டு ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர். இதனால் இதுவரை பரபரப்பாக காணப்பட்ட கூவத்தூர் ரிசார்ட் பகுதி பழையபடி அமைதி நிலைக்கு திரும்பும் என தெரிகிறது.
Comments
admk mlas resort legislative council rajbhavan அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட் ராஜ்பவன் பதவியேற்பு விழா
English summary
ADMK MLAs left from Koovathoor resort. They are going to Rajbhavan by three buses. They all going to participate in the swearing ceremoney.
Story first published: Thursday, February 16, 2017, 14:02 [IST]