நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... என்ன நடக்கும்? - வீடியோ
நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்த பிறகு, எதிர்பாராத வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனி அணியாக உருவெடுத்தனர். அவர்களில் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என அவர்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். அன்றிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்ட உள்ளார். அதில் அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்களா என்று கேள்வி எழுந்த நிலையில் அவர்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என கூறியுள்ளனர்.