ஜெ.வுக்காக பழனியில் பால்குடம் எடுத்த அமைச்சர் சீனிவாசன், எம்எல்ஏக்கள் பரமசிவம், தங்கதுரை!
திண்டுக்கல்: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி பழனி முருகன் கோவிலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், எம்எல்ஏக்கள் விபிபி பரமசிவம், தங்கதுரை உள்ளிட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா 2 வாரங்களுக்கு மேலாகா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தொடர்ந்து பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் நாள்தோறும் ஒவ்வொரு மத பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் தொடர்ந்து வருகின்றன. இதனிடையே திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் பழனியில் பால்குடம் ஏந்தி ஜெயலலிதா நலம் பெற வேண்டி வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், தமிழக அமைச்சர் சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.