என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி போட்டோவுக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி.. வெடித்த சர்ச்சை
என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்துக்கு அதிமுக எம்எல்ஏ விருகை ரவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: சென்னையில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்துக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆனந்தன். அண்மையில் ராஜவேலு என்ற போலீஸாரைத் தாக்கியதால் பாதுகாப்புக்காக ரவுடி ஆனந்தனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆனந்தன் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ரவுடி ஆனந்தன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ ரவி கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸாரால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் உருவப்படத்துக்கு அதிமுக எம்எல்ஏ விருகை ரவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, ராமநாதபுரத்தில் ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.