மதிமுகவிற்கு போன செல்வம், ராமராஜனும் அதிருப்தி... அணிமாற தயாராகும் அதிமுகவினர்
ராமராஜன் உள்பட பல நட்சத்திர பேச்சசாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் அதிருப்தியில் இருப்பதால் அணிமாற தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ராமராஜன் உள்ளிட்ட பலரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை செல்வம் அதிமுகவில் இருந்து மதிமுகவிற்கு சென்று விட்டார்.
அனிதா குப்புசாமி அதிமுகவில் இருந்து விலகி விட்டார். இப்போது புதுக்கோட்டை செல்வமும் மதிமுகவிற்கு சென்று விட்டார். இதே போல பல நட்சத்திர பேச்சாளர்கள், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் அதிமுகவை விட்டு விலக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து மதிமுகவில் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு சொன்ன ராமராஜன்
கடந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சசாமி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்த போது பல பேச்சாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றனர். அதில் ராமராஜன், தியாகுவும் கூட ஓபிஎஸ் பக்கம் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
கண்டு கொள்ளாத ஓபிஎஸ்
பிரிந்த அணிகள் சில மாதங்களில் இணைந்தன. ஆனால் பிரிந்த ஆதரவாளர்கள் இன்னமும் மனதளவில் இணையவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. துணை முதல்வராக இருக்கும் ஒபிஎஸ், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தற்போது கண்டு கொள்ளவில்லையாம்.
நட்சத்திர பேச்சாளர்கள்
கடந்த சில மாதங்களாக பொதுக்கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் பல பேச்சாளர்களின் வீட்டில் வறுமை குடியேறியுள்ளதாம்.
பாதுகாப்பு இல்லையா?
அதிமுகவில் இருந்து முதலில் விலகியவர் ஆர்த்திதான். அதிமுகவில் இருந்து விலகிய அனிதா குப்புசாமி, பெண்களுக்கு அதிமுகவில் பாதுகாப்பு இல்லை என்று கூறினார். நமீதாவோ திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.