For Daily Alerts
Just In
அட! கட்சிப் பணிக்கு என்னங்க குழந்தைங்க..பெரியவங்க..இது ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. லாஜிக்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் களை கட்டி வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும் ஷிஃப்ட் போட்டு அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி ஆகியோரை வரவேற்க அதிமுகவினர் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தியது அரசியல் கட்சிகளை கிளர்ந்தெழுச் செய்துள்ளது.
பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர்களும் பள்ளி குழந்தைகளை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்காமல், கொடி கம்புகளை இப்படி பிடியுங்கள், இப்படி கோஷம் போடுங்கள் என்று சொன்னது மேலும் அதிர்ச்சியையும், கவலையும் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
ADMK Used School Students to campaign in RK.Nagar byelection
Story first published: Thursday, June 18, 2015, 22:37 [IST]