மக்கள் அனைவரும் அம்மா பக்கமே...2016 தேர்தலிலும் அதிமுக வெல்லும் - மதுரை ஆதீனம் ஆருடம்!
மதுரை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியைப் போலவே 2016ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி தொடரும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தவிர மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளன.
இந்நிலையில்,அதிமுகவின் வெற்றி தொடர்பாக மதுரை ஆதீனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மக்கள் அனைவரும் அம்மா பக்கமே என்று நிரூபித்து விட்டனர். இந்த வெற்றி, வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலிலும் தொடரும்.
அம்மா என்றால் தாய். எனவே தாயுள்ளத்தோடு மக்கள் அனைவரும் மனநிறைவோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற அடிப்படையில் அம்மா ஆற்றிவரும் சேவைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் அனைவருக்கும் மதுரை ஆதீனத்தின் ஆசிகள் என்றென்றும் உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.