பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்வதில் கைது செய்ய தமிழக அரசுக்கு பயம்: தினகரன்
பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்வதில் கைது செய்ய தமிழக அரசுக்கு பயம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே எஸ்.வி சேகரை கைது செய்ய தமிழக அரசு பயப்படுவதாக அமமுக துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக துணைப் பொதுசெயலாளரும், ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி அவதூறு பரப்பிய எஸ்.வி சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் சொன்ன பிறகும், அவரை போலீஸார் கைது செய்யவில்லை.
அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே தமிழக அரசும், எடப்பாடி பழனிசாமியும் கைது செய்ய பயப்படுகின்றனர் என்றும், பாஜகவின் கிளை அரசான அதிமுக அதை ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், செல்லூர் ராஜு நகரத்தார் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.