For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதவிப் பித்தர்களுக்கு வேப்பிலை அடித்துள்ளாராம் ரஜினி.. சொல்கிறது நமது அம்மா!

தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என நமது அம்மா நாளிதழ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தெளிவா பேசியிருக்கிறார் ரஜினி- நமது அம்மா- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார் என நமது அம்மா நாளிதழ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், சமூக விரோதிகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றார்.

    எல்லாவற்றுக்கும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். ரஜினிகாந்தின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும்

    காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும்

    இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்று கட்டுரை வெளியாகியுள்ளது. நமது அம்மா நாளிதழில் காலிகள் ஒழிப்பும், கபாலியின் வாழ்த்தும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்வரின் கருத்து

    முதல்வரின் கருத்து

    "தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் மனம் திறந்து மனச்சாட்சியோடு பேசியிருக்கிறார். போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது.

    எள்ளளவும் ஐயமில்லை

    எள்ளளவும் ஐயமில்லை

    தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது. ரஜினி மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஷக்கிருமிகளும், சமூகவிரோதிகளும் திமுகவினர்தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    பதவிப்பித்து பிடித்து

    பதவிப்பித்து பிடித்து

    ராஜினாமா செய்வது பிரச்சினைக்கு தீர்வாகாது என நெத்தியடி பதில் கூறி பதவிப்பித்து பிடித்து அலையும் மாதிரி தலைவர்களுக்கு ரஜினி சரியாக வேப்பிலை அடித்துள்ளார். எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய் என கூறி வரும் கம்யூனிஸ்டுகளுக்கும் ரஜினியின் பதில் புத்தியில் உரைக்க புகட்டப்பட்ட மருந்து.

    சமூக விரோதிகள் புகுந்ததால்

    சமூக விரோதிகள் புகுந்ததால்

    சமூக விரோதிகள் யார் என்பதை கருத்து ஜாடை காட்டி அம்பலப்படுத்தி மனசாட்சி குன்றாது மக்களிடம் ரஜினிகாந்த் உண்மைய பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை என முதல்வரின் கருத்தையே ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது வன்முறைக்கு எதிரான இயக்கம் அதிமுக என்பதை ரஜினி வழிமொழிந்துள்ளார்" இவ்வாறு நமது அம்மா நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    ADMKs Namadhu Amma daily welcomes Rajinikanth statement on Anti social.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X