For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும் ‘அம்மா உணவகம்’ வேண்டும்... வக்கீல்கள் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்மா உணவகம் திறக்க கோரி தலைமை நீதிபதி மற்றும் முதல்வர் ஆகியோருக்கு இளம் வழக்கறிஞர் மன்றம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அறிமுகப் படுத்தப் பட்ட திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம்.

ஏழை மக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப் பட்ட இத்திட்டம் தற்போது விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

மலிவு விலைச் சாப்பாடு...

மலிவு விலைச் சாப்பாடு...

இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, மற்றும் ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு எனக் குறைந்த விலையில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

வரவேற்பு...

வரவேற்பு...

மலிவு விலையில் இப்படி உணவு வங்கும் இந்த அம்மா உணவகத்திற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் காணப்படுகிறது. கூட்டமும் அலை மோதுகிறது.

விரிவாக்கம்...

விரிவாக்கம்...

முதலில் நகரின் சில முக்கிய இடங்களில் மட்டுமே ஆரம்பிக்கப் பட்ட இந்த அம்மா உணவகம், தற்போது சில மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகிறது.

கோரிக்கை...

கோரிக்கை...

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர் மன்றம் தமிழக முதல்வர் மற்றும் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
The advocates association gave petition to chief justice and chief minister demanding to start Amma unavagam in Chennai high court premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X