For Daily Alerts
Just In
இறந்த நாள் எது என்பது சந்தேகம்.. அரசு சார்பில் ஜெ. நினைவு தினம் அனுசரிக்க கூடாது: ஹைகோர்ட்டில் மனு
ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா நினைவு தினத்தை அரசு அனுசரிக்க தடை கேட்டு வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை அரசு சார்பில் அனுசரிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சிவஞானம் அமர்வு முன்பு வழக்கறிஞர் துரைசாமி மற்றும் வழக்கறிஞர் குமாரவேலு முறையிட்டுள்ளனர்.
ஜெயலலிதா டிசம்பர் 5ல் தான் உயிரிழந்தாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக மனுவில் புகார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Comments
English summary
Advocates moved Madras Highcourt to ban Jayalalitha's anniversary day by Tamilnadu government as their is mysterious in her death.