பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.. சாத்தூர் நீதிமன்றம் அதிரடி!
பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
விருதுநகர்: பேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விருதுநகர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர்கள் பலருக்கு தொடர்பிருப்பதும் அம்பலமானது.
இந்நிலையில் 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவிக்கு மீண்டும் காவல் விதித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.