For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை- விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன

சென்னையில் கனமழை கொட்டியது. இதனால் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்கு பருவமழை கச்சேரி மீண்டும் களைகட்டிவிட்டது. சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

வடகிழக்கு பருவமழை நேற்று முதல் மீண்டும் உக்கிரமடைந்துவிட்டது. சென்னையில் பகலில் பெய்த மழை மாலையில் சற்றே ஓய்ந்திருந்தது.

After break, Rain returns to Chennai

பின்னர் இரவு 9 மணிக்கு கொட்டத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்தது.

பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.

இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

English summary
Chennai city and suburbs received heavy rainfall on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X