அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை -திவிகவினர் கைது
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை முன்னிட்டு பாஜக அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு நுங்கம்பாக்கத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முற்றுகையில் ஈடுபட்டதாக தமிழ்நாடு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர். முற்றுகையிட முயன்றவர்களை போலீஸ் தடுத்ததையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸ் கைது செய்தது