ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது.. துரைமுருகன் கலகல! #துரைமுருகன் ஆர்மி
ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலகல பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி இருக்கிறது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலகல பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர்களில் ஹியூமர் சென்ஸ் அதிகமுடையவர் துரைமுருகன். முன்னாள் அமைச்சரான அவர் சட்டசபையிலும் சரி பொதுக்கூட்டங்களிலும் சரி தனது கேலி கிண்டல் வெள்ளந்தி பேச்சால் எதிர்க்கட்சியையும் கவர்ந்துவிடுவார்.
அவ்வப்போது ஓவர் எமோஷனல் ஆகி மேடை என்றும் பார்க்காமல் அழுதாலும் கூட மறுகணமே தனது பேச்சு ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடுவார்.
துரைமுருகன் ஆர்மிக்காரர்கள்
இதனால் டிவிட்டரில் துரைமுருகன் ஆர்மி என்று ஒன்றை இவரது ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். அதில் துரைமுருகனின் சுவாரசிய பேச்சுக்களை பட்டியலிட்டு பரப்பி வருகின்றனர் துரைமுருகன் ஆர்மிக்காரர்கள்.
அரசியல் தலைவருக்கு ஆர்மி
வழக்கமாக திரை நட்சத்திரங்களுக்கு தான் நம்ம ஊர் ரசிகர்கள் ஆர்மி தொடங்குவார்கள். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு ஆர்மி தொடங்கியது வியப்பை ஏற்படுத்தியது.
துரைமுருகனிடம் கேள்வி
இதைத்தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சி துரைமுருகனிடம் பிரத்யேகமாக பேட்டி எடுத்தது. அதில் துரைமுருகனுக்கு என தனி ஆர்மி தொடங்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான்
அதற்கு அப்படியா... குட்.. என ஆர்வமாக கேட்ட துரைமுருகன், பிக்பாஸ் ஓவியாவுக்குப் பிறகு எனக்குதான் ஆர்மி தொடங்கியிருக்கிறார்கள் போல என்று கூறி புன்னகைத்தார்.
நன்றாக ஓடும்
மேலும் இனி பேட்டி கொடுக்கும்போது கூடுதல் சுவாரசியமாக கொடுக்க வேண்டும் அப்போது தான் நன்றாக ஓடும் என்றார். மேலம் அவ்வப்போது சமூக வலைதளங்களை பார்ப்பேன் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.