குண்டுக்கட்டாக கைது.. சட்டசபை சம்பவத்திற்கு பிறகு காவிரிக்காக மீண்டும் மோசமாக கையாளப்பட்ட ஸ்டாலின்
Recommended Video
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
இதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. தம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது தாம் தாக்கப்பட்டதாகவும் தம்முடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதன்பிறகு, ஆளுநரை சந்தித்த ஸ்டாலின், பிறகு, மெரினா கடற்கரையில் தர்ணா நடத்தினார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் ஸ்டாலின் தலைமையில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின், பேரணி நடத்தப்பட்டது. அப்போது காமராஜர் சாலை பகுதியில், ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.