For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் துப்பாக்கிச் சூடு... திரேஸ்புரத்தில் இரு பெண்கள் பலி

தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திரேஸ்புரத்தில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிக் சூட்டில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

Again gun shot happens in Tuticorin

எனினும் தள்ளுமுள்ளுவுடன் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே சென்று அலுவலகத்தை சூறையாடினர். இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 8 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் நிலைமையை பார்வையிட வந்த மாவட்ட எஸ்.பி.யின் வாகனத்தை திரேஸ்புரத்தில் மக்கள் முற்றுகையிட்டு 8 உயிருக்கு நியாயம் கேட்டனர்.

அப்போதும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரு பெண்கள் பலியாகிவிட்டனர். மொத்தம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகிவிட்டனர்.

English summary
People blockades Police SP's vehicle, then another gun shot happens in Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X