For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அக்னி" கிருஷ்ணமூர்த்திக்கு ஜாமீன் மறுப்பு!

Google Oneindia Tamil News

மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொறியாளர் செந்தில் ஆகியோரது மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ள அவா்கள் ஜாமீன் கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் நெல்லை முதலாவது அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Agri Krishnamoorthy's Bail petition rejected by madurai high court branch

இதைத் தொடர்ந்து மீண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொறியாளர் செந்தில் ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி சொக்கலிங்கம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

வேளாண் உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Agri Krishnamoorthy and chief Enggr senthikumar's Bail petition rejected by madurai high court branch
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X