For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

31ம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழு... ஜெ. அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னையில் வரும் 31ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமா ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

AIADMK excutive committee meeting on Dec 31

இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர் பட்டியலையும் அப்போது அவர் வெளியிட்டார்.

AIADMK excutive committee meeting on Dec 31

இந்த செயற்குழு, பொதுக்குழு ஏற்கனவே நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் இடையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறைக்குப் போய் விட்டார். ஆட்சி அலங்கோலமானது. அதிமுகவினர் கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டனர். பின்னர் குமாரசாமி புண்ணியத்தால் விடுதலையானார் ஜெயலலிதா. அதன் பின்னர் மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்தார். தற்போது மழை வெள்ள பாதிப்பு தமிழகத்தை, குறிப்பாக சென்னையை விட்டு இன்னும் அகலாத நிலையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The AIADMK's executive will meet at the party headquarters on December 31, according to a party release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X