அதிமுக செயற்குழு ஜூலை 2-ல் கூடுகிறது!!
சென்னை: அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில அதிமுக வார்டு வாரியாக பெற்ற வாக்குகள் குறித்து ஆராயப்பட்டு கட்சியில் களை நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீரென இன்றைய செயற்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஜூலை 2-ந் தேதி மாலை 3.45 மணியளவில் கட்சி தலைமை கழகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.