For Daily Alerts
Just In
அதிமுக பொதுக்குழு: கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெ.வுக்கு அதிகாரம் உட்பட 16 தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்குவது என்பது உட்பட 16 தீர்மானங்களை அக்கட்சியின் பொதுக்குழு நிறைவேற்றியுள்ளது.
சென்னை அருகே வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு இன்று நடைபெற்றது. முதல்வரும் கட்சி பொதுச்செயலருமான ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற இப்பொதுக் குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்குவது
- தமிழகம் மற்றும் புதுவையில் 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவது
- இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்தியா பயிற்சி தரக்கூடாது
- தமிழக திட்டங்களுக்கு நிதி அளிக்காத மத்திய அரசுக்கு கண்டனம்
என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் ஒருமனதாக இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Comments
English summary
Ahead of the 2014 lok sabha elections, the AIADMK general council here Thursday authorised party general secretary J. Jayalalithaa to hold talks and decide on issues related to electoral alliance and sharing of seats.
Story first published: Thursday, December 19, 2013, 18:03 [IST]