எடப்பாடி அரசில், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி! அதிமுக பொதுச்செயலாளராகிறார் ஓ.பி.எஸ்?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்தால் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளராகலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுக அணிகள் இணைப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. டிடிவி தினகரன் தரப்பை ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் இணைய முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இணைந்த பிறகு, பன்னீர்செல்வத்திற்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் அல்லது அதிமுக பொதுச்செயலாளர் பதவி கொடுக்கலாம் என்று தெரிகிறது. பாண்டியராஜன் ஏற்கனவே பள்ளி கல்வி அமைச்சராக இருந்து பதவி போனாலும் பரவாயில்லை என்று ஓ.பி.எஸ் அணிக்கு வந்தவர்.
எனவே அவரது விசுவாசத்திற்கு பரிசாக அமைச்சரவையில் இடம்பெற்றுக்கொடுக்க ஓ.பி.எஸ்சும் விரும்புகிறாராம். எனவே அவருக்கும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்க உள்ளது என்று கூறப்படுகிறது.