For Quick Alerts
For Daily Alerts
Just In
எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் அதிருப்திக்கு நடுவே, ஆளுநருடன் மைத்ரேயன் திடீர் சந்திப்பு
சென்னை: அதிமுக அணிகளுக்கிடையே அதிருப்தி வெடித்த நிலையில் ஆளுநரை இன்று, திடீரென சந்தித்தார் அதிமுக எம்.பி. மைத்ரேயன்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5.45 மணியளவில் மைத்ரேயன் சந்தித்தார். மதுரை- அதிமுக முப்பெரும் விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை. இதனால் அதிமுக ஐடி பிரிவினர் பகிரங்கமாக முதல்வர் மீது விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
மைத்ரேயன் ஒரு வாரமாகவே, இரு அணிகள் நடுவே அதிருப்தியுள்ளதாக பேஸ்புக்கில் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளார் மைத்ரேயன்.
இந்த சந்திப்பில் ஆட்சியின் மீது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அதிருப்தியிருப்பதாக தகவலை தெரிவித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
AIADMK MP Maitreyan mets Governor of Tamilnadu Banwarilal Purohit at Rajbhabvan on today.