அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் திடீர் மாற்றம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு,திருப்பூர் மாநகர்,திருப்பூர் புறநகர், மதுரை புறநகர்,கன்னியாகுமரி மாவட்டங்களின் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பாத்திமாபீவி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் நிர்வாகிகள் - மாவட்ட செயலாளர் - பத்மஜா ஜனார்த்தனம் (சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3-வது வார்டு உறுப்பினர்) மாவட்ட இணைச் செயலாளர் - சாந்தி.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்- செல்வக்குமாரி (மாவட்ட ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர்)
வேலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் - சுகன்யா மோகன்ராம்( வாலஜாபேட்டை நகரமன்ற முன்னாள் தலைவர்), இணைச் செயலாளர்-பவானி கருணாகரன் ( முன்னாள் எம்.எல்.ஏ)
விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்-கண்ணம்மாள் இளவழுதி
திருப்பூர் மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளர் - ரேவதிக்குமார்( பொதுக்குழு உறுப்பினர் தாராபுரம் தொகுதி)
திருப்பூர் மாநகர மாவட்ட பல்லடம் நகர மகளிர் அணி செயலாளர் - சித்ராதேவி
மதுரை புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர்-சண்முகப்பிரியா மாநகராட்சி 24-வது வார்டு உறுப்பினர்)
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் -டாரதி சேம்சன் (நாகர்கோவில் மாவட்ட இணைச் செயலாளர்-ஹெப்சிபாய் இன்பராணி(மாறாங்கோணம், மேக்கா மண்டபம், தக்கலை ஒன்றியம்)
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.