For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் புறப்பட்டனர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று சென்னைக்கு வந்தனர்.

AIIMS doctors left from apollo

பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் வெளியேறினர்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை சுற்றி 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்னர்.

English summary
AIIMs medical team left from apollo hospital, says sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X