நண்பேன்டா.. ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனைக்கு உதவ வந்த ஏர்டெல்.. என்ன செய்கிறார்கள் தெரியுமா?
ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது.
Recommended Video
சென்னை: ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்னையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது.
இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த மூன்று நாட்களாக யாருக்கும் எடுக்கவில்லை. பலரும் இதனால் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருக்கிறது. தற்போது ஏர்செல் இதற்கு தற்காலிக தீர்வு கண்டு இருக்கிறது.
டவர்கள்
8 ஆயிரம் டவர்கள் வரை தற்போது செயல் இழந்து இருக்கிறது. முக்கியமாக தென்னிந்தியாவில் அனைத்து டவர்களும் செயல் இழந்து உள்ளது. அவர்களின் இணையதளமும் செயலிழந்துள்ளது.
செயல்பாடு நிற்காது
ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இன்னும் 15 வருடத்திற்கு ஒப்பந்தம் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
உதவி
இந்த சிக்னல் பிரச்சனைக்கு தற்போது ஏர்டெல் நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. ஏர்டெல்லுக்கு சொந்தமான டவரில் இருந்து தற்காலிகமாக சில ஏர்செல் சிம் கார்டுகளுக்கு மட்டும் டவர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை சரியாகும் வரை இந்த முறை கடைபிடிக்கப்படும்.
மாற்றம்
அதேபோல் நம்பர் மாற்றவும் ஏர்டெல் நிறுவனத்தை அணுகி இருக்கிறது. நிறைய பேர் நம்பர் மாற்ற விண்ணப்பித்து இருப்பதால், ஏர்டெல்லிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. ஏர்செல்லில் இருந்து மாறவிரும்புபவர்கள் எளிதாக இனி ஏர்டெல்லுக்கு மாற முடியும்.