இன்று முதல் சென்னையில் “4ஜி” – டெஸ்ட் செய்யும் ஏர்டெல்!
சென்னை: இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஏர்டெல், சென்னையில் இன்று தனது 4ஜி சேவையை சோதித்து பார்க்க உள்ளது.
1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் விட்த்தில் தொடங்கப்படும் இந்த 4ஜி சேவையை சோதித்து பார்க்குமாறு தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து ஏர்டெல் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். சென்னையை அடுத்து ஹைதராபாத்திலும், மும்பையிலும் 4ஜி சேவை சோதித்து பார்க்கப்படும் என்று தெரிகிறது.
மும்பையில் இம்மாத இறுதிக்குள் 2300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் விட்த்தில் 4ஜி சேவையின் சோதனை நடத்தப்பட உள்ளது.
கொல்கத்தா, பெங்களூரு, புனே, சண்டிகர், மொகாலி மற்றும் பஞ்ச்குலா உள்ளிட்ட 19 நகரங்களில் 4ஜி சேவையை ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.