நுங்கம்பாக்கத்தில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆகாஷ், யார் மகன் தெரியுமா?
Recommended Video
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று, சொகுசு கார் மோதியதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது.
நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை வேகமாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து, பிளாட்பாரத்தில் இருந்த டூவீலர்கள் மீது மோதியது.
இதில் பிளாட்பாரத்தில் இருரந்த 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், படுகாயமுற்ற மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸ் விசாரணையில், காரை ஓட்டியது ஆகாஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அவரிடம், பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆகாஷ் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ் மகன் என்பது தெரியவந்துள்ளது. குழந்தையின்மைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையை வட பழனியில் நடத்தி வருபவர் பிரபல மருத்துவர் காமராஜ் ஆகும்.