ஆலந்தூர் இடைத்தேர்தல்: அதிமுக 18708 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
சென்னை: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். 18708 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆலந்தூர் தொகுதியை கைப்பற்றியது.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், தி.மு.க. வேட்பாளராக முன்னாள் நகரசபை தலைவர் ஆர்.எஸ்.பாரதி, தே.மு.தி.க. வேட்பாளராக ஏ.எம்.காமராஜ், காங்கிரஸ் சார்பில் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத், ஆம் ஆத்மி கட்சி சார்பில் எழுத்தாளர் ஞாநி ஆகியோர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி வெங்கட்ராமன் 89295 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் ஆர். எஸ். பாரதி பெற்ற வாக்குகள் 70587 ஆகும். மூன்றாவது இடத்தில் இருக்கும் தேமுதிக வேட்பாளர் 20442 வாக்குகளைப் பெற்றார்.
இந்த தொகுதியில் 4248 நோட்டா வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத் 6535 வாக்குகள் பெற்றுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஞாநி சங்கரன் 5729 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
அதிமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 18708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆலந்தூர் தொகுதியை கைப்பற்றினார்.