For Daily Alerts
Just In
ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் சி.பி. கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அப்படி மத்திய அரசு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசின் இந்த மெத்தனத்தை வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் மத்திய அரசைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
Comments
English summary
All India Bank employees will hold protest on tomorrow against the Centre on currency ban.