For Daily Alerts
Just In
எல்லாம் தலையெழுத்து.. ஜெ. அன்பழகன் வேதனை!
வங்கிகளில் மக்கள் வரிசையில் நிற்க முடியாமல் புத்தகங்களைப் போட்டுள்ள புகைப்படத்தை டிவிட்டரில் போட்டு நாட்டின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.
சென்னை: ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்ற பொதுமக்கள் வரிசையில் நிற்க முடியாமல் நோட்டுக்களையும், பைகளையும் வரிசையில் வைத்த படத்தைப் போட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் , எல்லாம் நாட்டு மக்களின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதில் நீண்ட வரிசையாக புத்தகங்கள், செய்தித்தாள்கள், பைகளை மக்கள் வரிசையாக போட்டு வைத்துள்ளனர்.
Fate of our Nation due to demonetisation.
— J Anbazhagan (@JAnbazhagan) November 16, 2016
All Credits to @narendramodi & Co. pic.twitter.com/1L8PGwkqZ1
இதுகுறித்து அன்பழகன் கருத்து தெரிவிக்கையில், ரூபாய் நோட்டுக்களை ஒழித்ததால் நாட்டின் தலையெழுத்து இது. எல்லாப் புகழும் நரேந்திர மோடி அன் கோவுக்கே என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
DMK MLA J Anbalagan hsa said that its all our nation's fate quoting a que at a bank to exchange the currencies.