புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்.. காவிரி பங்கீடு தொடர்பாக விவாதம்
புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
சென்னை: புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அந்த யூனியன் பிரதேசத்தின் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.
மேலும் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், துறை செயலாளர்களை வைத்து, காவிரி தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து, டெல்லியில் வரும் 9-ம் தேதி கூட்டம் கூட்டப்பட உள்ளது.
இதையடுத்து தற்போது காவிரி பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க புதுச்சேரியில் மார்ச் 8-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க இருக்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்து இருக்கிறார்.